மதுபான போத்தல்களில் ஒட்டப்படும் போலி ஸ்டிக்கர்கள்
இலங்கைசெய்திகள்

மதுபான போத்தல்களில் ஒட்டப்படும் போலி ஸ்டிக்கர்கள்

Share

மதுபான போத்தல்களில் ஒட்டப்படும் போலி ஸ்டிக்கர்கள்

மதுபான போத்தல்களில் போலி ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டமை தொடர்பில் பதிவாகும் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு பாரபட்சமின்றி தண்டனை வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தில் எவ்வளவு பெரிய மதுபான நிறுவனம் குற்றவாளியாக இருந்தாலும் சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தயங்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து மதுபான தொழிற்சாலைகளையும் கண்காணிப்பதற்கு கலால் திணைக்கள அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், கலால் திணைக்கள அதிகாரிகளின் தவறுகள் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்த தயாராக இருப்பதாகவும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் உள்ள மதுபானசாலைகளில் கலால் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சுமார் 8000 போலி மது போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதன் பின்னணியில் கலால் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவரும் இருப்பதாக கூறப்படுகிறது.

மதுபான நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை குறைக்க போலி ஸ்டிக்கர்கள் பயன்படுத்துவதால், கடந்த காலங்களில் மது வரி வருவாய் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
23 64dd30bee2ed3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் அதிர்ச்சி: வடமராட்சிப் பகுதியில் இளைஞர் வெட்டிக் கொலை – பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்தவர் பலி!

யாழ்ப்பாணம் – வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் நேற்று (நவம்பர் 19) இரவு இடம்பெற்ற சம்பவத்தில்,...

image 7d7149706b
செய்திகள்இலங்கை

ஆசிரியர் நியமனங்கள்: ‘நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னரே பட்டதாரிகளுக்கு நியமனம்’ – கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவது குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி...

images 10 2
செய்திகள்இலங்கை

தங்காலையில் தம்பதியினர் கொலை: ‘உனகுருவே சாந்தாவின்’ உறவினர்கள் என தகவல் – 5 பொலிஸ் குழுக்கள் துரித விசாரணை!

தங்காலை, உனகுருவ (Unakuruwa) பகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) மாலை 6.55 மணியளவில் இடம்பெற்ற...

New Project 222
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்கத்தில் மண்சரிவு: ரயில் சேவைகள் நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டன!

மலையக ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் இன்று வியாழக்கிழமை (நவ 19) நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக...