5 48
இலங்கைசெய்திகள்

ரணில் வழங்கிய சம்பள அதிகரிப்பை கழித்தால் மிகுதி 950 ரூபாவே: ரஞ்சித் மத்தும பண்டாரவின் விளக்கம்

Share

ரணில் வழங்கிய சம்பள அதிகரிப்பை கழித்தால் மிகுதி 950 ரூபாவே: ரஞ்சித் மத்தும பண்டாரவின் விளக்கம்

அரச ஊழியர்களுக்கு இந்த அரசாங்கத்தால் 8250 ரூபாவே சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது, இதில் ஏப்ரல் மாதத்தில் வழங்கப்படவுள்ள 5950 ரூபாவிலும் 5000 ரூபா ரணில் விக்ரமசிங்க மார்ச் மாதம் வரை வழங்கியது என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

அதனை கழித்தால் 950 ரூபாவே அரச ஊழியர்களுக்கு இந்த வருட சம்பள அதிகரிப்பாகக் கிடைக்கிறது. ஏப்ரல் மாத சம்பளம் கையில் கிடைக்கும் போது, அரசாங்கத்தின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரச ஊழியர்களுக்குத் தெரியவரும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (25.02.2025) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஏழாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மாற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இதுவரை எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.

ஆனால் அவர்கள் கடந்த அரசாங்கங்களின் கொள்கைக்கு மாறிவிட்டனர். தனியார் மயப்படுத்தல் வெளிநாட்டு முதலீடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே இருந்தனர்.

இன்று தனியார் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு எதிராக போராட்டம் நடத்திய இவர்கள் தற்போது தனியார் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் செல்ல வேண்டும் எனத் தெரிவிக்கின்றனர்.

நெவில் பெர்ணாந்து பல்கலைக்கழகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தற்போது நாட்டில் தனியார் பல்கலைக்கழகம் ஆரம்பிக்க வேண்டும் என்கின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...