23 64c906587a01b
அரசியல்இலங்கைசெய்திகள்

முற்றிலும் புதிய சின்னத்தில் தேர்தலில் களமிறங்கும் ரணில்

Share

முற்றிலும் புதிய சின்னத்தில் தேர்தலில் களமிறங்கும் ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe), யானை அல்லது மொட்டு அல்லாமல் முற்றிலும் புதிய சின்னத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியிஸ்தருமான ஆஷு மாரசிங்க(Ashu Marasinghe) தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தேசிய வேட்பாளராக பல கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துவார் என அவர் ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார்.

“ஜனாதிபதித் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிட்டால் அவருக்கு ஆதரவளிப்பதில் அவர் உட்பட பலருக்கு பிரச்சினை இருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க போன்றவர்கள் கூறியுள்ளனர்.

அதேபோன்று, அவர் மொட்டுவின் கீழ் போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள தமக்கும் பிரச்சினை உள்ளது.

எனவே விக்ரமசிங்க புதிய சின்னத்தில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது என்று மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் 80 சதவீதத்திற்கும் அதிகமான ஐக்கிய மக்கள் சக்தியினர் ரணிலுக்கு ஆதரவளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக்கட்சியும் ஒன்றிணைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள முன்வைத்துள்ள பிரேரணையை நாங்கள் வரவேற்கிறோம் என்றும் மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்

அரசியலமைப்பின்படி ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் இரண்டையும் ஒரே நாளில் நடத்த முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...