25 6848da9c06078
இலங்கைசெய்திகள்

இன்று சிஐடியில் ரணில்! முடிவுக்காக காத்திருக்கும் பலர்..

Share

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.

தரமற்ற மருந்துகளை நாட்டுக்கு இறக்குமதி செய்தமை தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக ரணில் விக்ரமசிங்க சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணிலிடம் இருந்து பெறப்படவுள்ள வாக்குமூலத்தின் முதன்மை நோக்கம், அப்போதைய அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பின் கீழ் எடுக்கப்பட்ட முடிவுகளின் வெளிப்படைத்தன்மையை ஆராய்வதாகும் என்று சிஐடி வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், அப்போதைய அரசாங்கத்தின் தலைவராக முடிவெடுக்கும் செயல்பாட்டில் ரணில் எவ்வாறு ஈடுபட்டார் என்பது தொடர்பிலும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பாக ஏற்கனவே பலர் சிஐடிக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்து விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கின்றமை விசாரணைகளின் அடுத்தக்கட்டம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று சிஐடியில் ரணில்! முடிவுக்காக காத்திருக்கும் பலர்.. | Ranil Wickremesinghe Cid Investigation

மேலும், ரணில் சிஐடியில் முன்னிலையாவது, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மற்றும் முடிவுகள் தொடர்பில் தென்னிலங்கை அரசியல் அவதானிகள் அதிக அவதானம் செலுத்துகின்றனர்.

Share
தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...