25 68482f8236782
இலங்கைசெய்திகள்

நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் பாதணியோடு பிக்கு! முகம்சுழிக்க வைக்கும் செயல்

Share

வரலாற்று சிறப்புமிக்க நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்திற்குள், பாதணிகளை அணிந்து சில பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மக்களும், பௌத்த பிக்கு ஒருவரும் சென்றுள்ள காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

அதியுயர் பாரம்பரியங்களுடன், மிக ஒழுக்கமாக பேணப்பட்டு வரும் ஆலய சூழல் மற்றும் ஆலயம்சார் செயற்பாடுகளுக்கு மத்தியில், இப்படி பாதணி அணிந்து ஆலயத்திற்குள் பிக்கு ஒருவர் உள்ளிட்ட சிலர் வருகைத் தந்தமை பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

உண்மையில், தமிழர் கலாசாரத்தில் மிகப்பெரியதாக போற்றப்படுவது, ஒழுக்கமும், பாரம்பரியம் பேணுதலும், மரியாதை செய்தலும் ஆகும்.

ஏனைய பல விடயங்களில் பல விட்டுக் கொடுப்புக்களைச் செய்தாலும் கூட இதுபோன்ற கலாசாரத்திற்கு தீமை விளைவிக்கும் பணிகளைச் செய்வதில் யாரும் உடன்படுவதில்லை.

அதிலும், தெய்வ வழிபாட்டில் உள்ளதை உள்ளபடி காத்தலும், பேணலும் தலைமுறை தலைமுறையாய் சீர்குழையாமல் வழிவந்து கொண்டிருக்கின்றன.

இவ்வாறான சூழலில், தமிழர்களால் அதிகம் போற்றப்படும் ஆலயத்திற்குள் இவ்வாறு பாதணி அணிந்து வருவதென்பது பலருக்கு சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், விமர்சனங்களையும், பிரிவினைவாதத்தையும் ஏற்படுத்துவதாக அமைகின்றது.

நாகபூசணி அம்மன் ஆலயம் ஒரு பக்தித் தளம் மாத்திரம் அல்லாமல் பலரும் வியந்து பார்க்கும் வரலாறு கொண்ட, உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் வந்து தரிசித்துச் செல்லும் புகழ்பெற்ற தளமாகவும் காணப்படுகின்றது.

இந்தநிலையில், பாதணிகள் அணிந்து வருதல் போன்ற சில செயற்பாடுகள் குறித்த புனித தளத்திற்கு உகந்ததல்ல என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...