24 662b419836ad6
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அவசர சந்திப்பில் ஈடுபட்ட ரணில்

Share

நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அவசர சந்திப்பில் ஈடுபட்ட ரணில்

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் விசேட கூட்டம் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது. இந்த சந்திப்பு சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்,

“நாட்டின் பொருளாதார முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டது. இப்போது சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த காலாண்டின் பின்னர் இலங்கையுடன் இணைந்து செயற்படக்கூடிய பொருளாதாரம் இருப்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளும். அடுத்து, நாங்கள் தேர்தலுக்கு தயாராக இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவிக்கையில்,

“உள்ளூராட்சி சபைகளில் பணியாற்றும் 8400 ஊழியர்கள் விரைவில் நிரந்தர நியமனம் பெற்றுத் தருமாறு வலியுறுத்தப்பட்டது. அந்த ஊழியர்களுக்கு மிக விரைவில் நிரந்தர நியமனம் வழங்கி தேவையான பணிகளை செய்து தருவோம் என நம்புகிறோம்.

தேர்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் இந்த ஆண்டு கண்டிப்பாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். பொதுஜன பெரமுன மற்றும் நாம் அனைவரும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவோம் என நம்புகிறோம்.

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் யார் என்பது அடுத்த மாதம் அறிவிக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Dr. Nalinda Jayathissa 2024.08.23 1
செய்திகள்இலங்கை

ஏற்றுமதி கஞ்சா திட்டம்: ‘உள்ளூர் சந்தையில் நுழைய வாய்ப்பில்லை; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’ – அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ!

இலங்கையில் ஏற்றுமதி நோக்கங்களுக்காக முதலீட்டு மண்டலங்களில் (Investment Zones) மேற்கொள்ளப்படும் கஞ்சா பயிர்ச்செய்கை திட்டம் தொடர்பான...

crime arrest handcuffs jpg
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

அதிபர் மற்றும் மகன் கைது: ₹ 20 மில்லியன் மதிப்புள்ள ஹெராயினுடன் எப்பாவல ஹோட்டலில் சிக்கினர்!

அனுராதபுரம், எப்பாவல பகுதியில் 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஹெராயினுடன் (Heroin) ஒரு பாடசாலை...

10 signs symptoms of drug addiction scaled 1
செய்திகள்இலங்கை

கொழும்பில் அதிர்ச்சி: போதைப்பொருளுக்கு அடிமையாகும் பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு – அமைச்சகம் கடும் கவலை!

கொழும்பு மற்றும் அருகிலுள்ள நகரங்களில் போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது குறித்துச்...

25 68747c5f98296
செய்திகள்இலங்கை

நடிகர் சரத்குமார் இலங்கை வருகை: நான்கு நாட்கள் தங்கத் திட்டம்!

பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகர் சரத்குமார், இன்று (நவ 05) காலை இலங்கையை வந்தடைந்தார். நாட்டின்...