பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பதில் ஜனாதிபதியாக சற்று நேரத்துக்கு முன்னர் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.
பிரதம நீதியரசர் முன்னிலையில் அவர், இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.
ஜனாதிபதியாக செயற்பட்ட கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியுள்ள நிலையிலேயே, பிரதமர் பதில் ஜனாதிபதியாகியுள்ளார்.
புதிய ஜனாதிபதி தெரிவு, எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறும்.
#SriLankaNews