tamilnis 3 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

பொது வேட்பாளரை அறிவித்த ஐக்கிய தேசிய கட்சி

Share

பொது வேட்பாளரை அறிவித்த ஐக்கிய தேசிய கட்சி

ஐக்கிய தேசியக் கட்சியின் பொது வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் முதலாவது கூட்டம் குளியாப்பிட்டியவில் இடம்பெற்றது. இந்த கூட்டத்திலேயே பொது வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கூட்டத்தில் உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ரவி கருணாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான பொது முன்னணியின் பொது வேட்பாளராக ஜனாதிபதி விக்ரமசிங்க நிச்சயமாக நிறுத்தப்படுவார் என தெரிவித்தார்.

இதேவேளை ஜனாதிபதி விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ள அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக தெரிவித்தார்.

நெருக்கடி காலத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தவறியதற்கு வேறு எந்தக் கட்சித் தலைவர்களையும் குற்றம் சொல்லப் போவதில்லை என்றும் அவர்களால் செயல்பட முடியவில்லை என்பது தற்போது நிரூபணமாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தலைவர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, பிரதித் தலைவர் ருவ்வான் விஜேவர்தன, உதவித் தலைவர் அகில விராஜ் காரியவசம் உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...