24 6651e06c14d17
இலங்கைசெய்திகள்

அரிசியால் தன்னிறைவு அடைந்துள்ள நாடு: ரணில் பெருமிதம்

Share

அரிசியால் தன்னிறைவு அடைந்துள்ள நாடு: ரணில் பெருமிதம்

சுமூகமான அரிசி உற்பத்தியால் நாடு தன்னிறைவு அடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் (Kilinochchi), இன்று (25.05.2024) இடம்பெற்ற மக்களுக்கு காணி உரிமைகளை வழங்கும் நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், எமது நாடானது, அரிசி உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளது. இதில், வன்னி, அநுராதபுரம், பொலன்னறுவை ஆகிய மாவட்டத்தினர் பெரும் பங்காற்றியுள்ளனர்.

எனவே, இந்த மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு காணி உரிமையை வழங்க முடிந்தமை அரசாங்கம் பெற்ற தனித்துவமான வெற்றியாகும்.

அதேவேளை, விரைவில் நவீன விவசாயம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதால் அதனைப் பயன்படுத்தி, போட்டித் தன்மை மிக்க விவசாயத்துறையை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறேன்.

அது மாத்திரமன்றி, உங்களின் காணிகளை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். போரினால் காணிகளை இழந்தவர்கள் பெரும்பாலானோர் இருக்கின்றனர்.

ஆகையால், தற்போது கிடைக்கும் காணிகளை இழந்துவிடக் கூடாது. நீங்கள் இந்தக் காணிகளில் விவசாயம் செய்து, வீடுகளைக் கட்டி அவற்றை உங்களுக்குப் பின்னர் உங்கள் பிள்ளைகளுக்கு வழங்குங்கள்” என வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...