7 57
இலங்கைசெய்திகள்

அநுர அரசாங்கத்திற்கு சவாலாக மாறும் ரணில்

Share

அநுர அரசாங்கத்திற்கு சவாலாக மாறும் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற சிறப்பு அரசியல் கலந்துரையாடலின் போது பல விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொழும்பில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இந்தக் கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது. இதன்போது வரவிருக்கும் தேர்தல்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிகளின் பேச்சுவார்த்தைகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இரு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த விடயத்தில் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். சமகால அநுர அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து நீண்ட விவாதங்கள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் எதிர்க்கட்சி கட்சிகளை அடக்குவதாகவும், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு முரணான முறையில் அரசாங்கம் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் கோப் குழு போன்ற குழுக்களின் தலைவர் பதவி, அப்போது எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய சுனில் ஹந்துன்நெத்திக்கு வழங்கப்பட்டது, ஆனால் தற்போதைய அரசாங்கம் கோப் தலைவர் பதவியைத் தக்க வைத்துக் கொள்ளும் முடிவும் தீவிர விவாதத்திற்கு உட்பட்டது.

நாடாளுமன்றக் குழுக்களுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களை நியமிக்கத் தவறியது குறித்தும் ரணிலுடனான சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலை ரணில் விக்ரமசிங்க கூட்டியிருந்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், தனித்தனியாகப் போட்டியிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் மனோ கணேசன் மற்றும் பி. திகாம்பரம் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.

மேலும், முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, உதய கம்மன்பில, அனுர பிரியதர்ஷன யாப்பா, துமிந்த திசாநாயக்க, கஞ்சன விஜேசேகர, சாகல ரத்நாயக்க, வஜிர அபேவர்தன, மற்றும் பிரேமநாத் சி தொலவத்த ஆகியோரும் இதில் இணைந்துள்ளனர்.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...