7 57
இலங்கைசெய்திகள்

அநுர அரசாங்கத்திற்கு சவாலாக மாறும் ரணில்

Share

அநுர அரசாங்கத்திற்கு சவாலாக மாறும் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற சிறப்பு அரசியல் கலந்துரையாடலின் போது பல விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொழும்பில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இந்தக் கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது. இதன்போது வரவிருக்கும் தேர்தல்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிகளின் பேச்சுவார்த்தைகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இரு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த விடயத்தில் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். சமகால அநுர அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து நீண்ட விவாதங்கள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் எதிர்க்கட்சி கட்சிகளை அடக்குவதாகவும், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு முரணான முறையில் அரசாங்கம் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் கோப் குழு போன்ற குழுக்களின் தலைவர் பதவி, அப்போது எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய சுனில் ஹந்துன்நெத்திக்கு வழங்கப்பட்டது, ஆனால் தற்போதைய அரசாங்கம் கோப் தலைவர் பதவியைத் தக்க வைத்துக் கொள்ளும் முடிவும் தீவிர விவாதத்திற்கு உட்பட்டது.

நாடாளுமன்றக் குழுக்களுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களை நியமிக்கத் தவறியது குறித்தும் ரணிலுடனான சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலை ரணில் விக்ரமசிங்க கூட்டியிருந்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், தனித்தனியாகப் போட்டியிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் மனோ கணேசன் மற்றும் பி. திகாம்பரம் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.

மேலும், முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, உதய கம்மன்பில, அனுர பிரியதர்ஷன யாப்பா, துமிந்த திசாநாயக்க, கஞ்சன விஜேசேகர, சாகல ரத்நாயக்க, வஜிர அபேவர்தன, மற்றும் பிரேமநாத் சி தொலவத்த ஆகியோரும் இதில் இணைந்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...