13 2
இலங்கைசெய்திகள்

நாட்டு மக்களுக்கு ரணில் விடுத்துள்ள எச்சரிக்கை

Share

நாட்டு மக்களுக்கு ரணில் விடுத்துள்ள எச்சரிக்கை

அனுபவம் வாய்ந்தவர்களை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யாவிடின் துன்ஹிந்த – பதுளை வீதியில் கவிழ்ந்த கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பேருந்தைப் போன்று நாடு விபத்துக்குள்ளாகும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற மாநாட்டின் போது கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே பல தடவைகளாக இந்த அனுபவம் என்ற விடயத்தை ரணில் விக்ரமசிங்க, கோடிட்டு பிரசாரங்களில் பேசியுள்ளார்.

அந்த வகையிலேயே இன்றும் ரணிலின் கருத்து வெளியாகியுள்ளது.

தேசிய மக்கள் சக்தியில் (NPP) உள்ளவர்கள் புதிதாக களத்துக்கு வந்தவர்கள் என்றும் நாட்டை முன்னேற்றிச் செல்வதற்கு அனுபவம் தேவை என்பதே ரணிலின் கருத்தாக அமைந்துள்ளது.

எனினும், நாட்டை நிர்வகிப்பதற்கு தேவையான அணி தம்மிடம் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...