இலங்கைசெய்திகள்

அநுர அரசை விடாது துரத்தும் ரணில்: சவாலுடன் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

1 28
Share

அநுர அரசை விடாது துரத்தும் ரணில்: சவாலுடன் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தாம் அறிமுகப்படுத்திய பாதையில் செல்லாவிட்டால் நாட்டின் பொருளாதாரத்தை கையாள முடியாது என அநுர அரசாங்கத்தை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) எச்சரித்துள்ளார்.

கொழும்பு (Colombo) மருதானையில் நேற்று (11) இடம்பெற்ற இறுதி மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதன்போது அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது, “இந்த நாட்டில் உள்ள அனைத்து வரிசைகளையும் நாங்கள் நிறுத்தினோம். சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து கடன்களையும் நிர்வகித்தோம்.

2028க்குள் கடனை அடைக்கத் தொடங்க வேண்டும். 2042 வரை அவகாசம் உள்ளது. கடனை கட்டவில்லையென்றால் மீண்டும் வரிசை உருவாகும் காலத்துக்கு செல்ல வேண்டும்.

பொருளாதார தொலைநோக்கு பார்வையை ஜனாதிபதி இதுவரை சொல்லவில்லை. பெரும் நிச்சயமற்ற நிலை உள்ளது.

இப்போது அரிசி கிடைக்கவில்லை. தென்னை மரத்தை விட தேங்காய் விலை உயர்ந்துள்ளது, பொருட்களின் விலை தாமரை கோபுரம் போல் உயர்ந்து வருகிறது. முட்டை விலை அதிகரித்து வருகிறது.இவற்றை அரசால் தீர்க்க முடியுமா?

இந்த அரசு சர்வதேச நாணய நிதியத்துடன் எப்படி பேச்சுவார்த்தை நடத்துகிறது? பணக்கார நாடு, அழகான வாழ்க்கை என்ற விஞ்ஞாபனம் ஜனாதிபதித் தேர்தலில் கொண்டு வரப்பட்டது. அவற்றை இப்போது செயல்படுத்த முடியுமா?

கொழும்பு மற்றும் வாஷிங்டனில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேசப்பட்டது. இப்போது மூன்றாவது தவணை எடுப்பது பற்றி ஆலோசிக்கிறீர்களா?

ஜனாதிபதி தேர்தலின் போது வரிச்சலுகை வழங்குவதாக திசைக்காட்டி கூறியது. அவை கிடைக்குமா? இல்லையா? அறிக்கை வெளியிடுங்கள்” என்றார்.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...