24 66087cabd395b
இலங்கைசெய்திகள்

கடற்றொழிலாளர்கள் தொடர்பில் ரணில் வழங்கிய கோரிக்கை

Share

கடற்றொழிலாளர்கள் தொடர்பில் ரணில் வழங்கிய கோரிக்கை

இந்திய பிரத்தியேக பொருளாதார மண்டலம் வழியாக தனது கடற்றொழிலாளர்கள் தொழில் நிமித்தம் அரபிக்கடலுக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற இலங்கையின் கோரிக்கைக்கு இந்தியா இன்னும் பதிலளிக்கவில்லை.

கடந்த வருடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்த போது இலங்கையின் சார்பில் இந்த கோரிக்கையை விடுத்தார்.

இந்திய பொருளாதார மண்டலத்தின் ஊடாக அரபிக்கடலுக்கு செல்லும்போது இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு மொத்த தூரத்தில் 400 கடல் மைல்கள் தூரம் குறையும். இல்லையேல், இலங்கையின் கடற்றொழிலாளர்கள், நீர்கொழும்பு, திக்கோவிட்ட, பேருவளை மற்றும் மாத்தறை வழியாக மாலைதீவைச் சுற்றி நீண்ட பாதையில் சென்றே அரபிக்கடலில் தொழிலில் ஈடுபடுகின்றனர்.

அத்துடன் தற்போது இலங்கை கடற்றொழிலாளர்கள், அரபிக்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் வழியில் சட்டவிரோதமாக இந்திய கடல் எல்லைக்குள் நுழையும் போது இந்திய கடலோர காவல்படையினரால் தடுத்து வைக்கப்படுகின்றனர்.

இதனை மையப்படுத்தியே இலங்கையின் கோரிக்கை இந்தியாவிடம் விடுக்கப்பட்டுள்ளது. எனினும் இன்னும் பதில் வழங்கப்படவில்லை.

அதேநேரம் இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத கடற்றொழில் தொடர்பிலும் இன்னும் தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை.

Share
தொடர்புடையது
ahr0chm6ly9jyxnzzxr0zs5zcghkawdp 4
உலகம்செய்திகள்

துப்பாக்கியைப் பிடுங்கிய ‘ஹீரோ’ அஹமது அல் அஹமதுவைச் சந்தித்த பிரதமர் அல்பானீஸ்; துப்பாக்கிக் கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) யூதர்கள் நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது, துணிச்சலுடன்...

coverimage 01 1512114047 1546165239 1562741874
இலங்கைசெய்திகள்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று 6% அதிகரிப்பு:உயிரிழப்புகள் 30 ஆகப் பதிவு!

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில்...

images 5 5
உலகம்செய்திகள்

இந்தியா-ரஷ்யா இராணுவ ஒப்பந்தம்: ‘தளவாட ஆதரவு பரஸ்பரப் பரிமாற்ற’ சட்டத்துக்குப் புட்டின் ஒப்புதல்!

இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான ‘Reciprocal Exchange of Logistics Support’ (தளவாட ஆதரவின் பரஸ்பரப்...

articles2FvNVHzqk0rGKKgejyoUzJ
இலங்கைசெய்திகள்

கல்வி ஒத்துழைப்பு வலுப்படுத்தல்: வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த...