24 66087cabd395b
இலங்கைசெய்திகள்

கடற்றொழிலாளர்கள் தொடர்பில் ரணில் வழங்கிய கோரிக்கை

Share

கடற்றொழிலாளர்கள் தொடர்பில் ரணில் வழங்கிய கோரிக்கை

இந்திய பிரத்தியேக பொருளாதார மண்டலம் வழியாக தனது கடற்றொழிலாளர்கள் தொழில் நிமித்தம் அரபிக்கடலுக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற இலங்கையின் கோரிக்கைக்கு இந்தியா இன்னும் பதிலளிக்கவில்லை.

கடந்த வருடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்த போது இலங்கையின் சார்பில் இந்த கோரிக்கையை விடுத்தார்.

இந்திய பொருளாதார மண்டலத்தின் ஊடாக அரபிக்கடலுக்கு செல்லும்போது இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு மொத்த தூரத்தில் 400 கடல் மைல்கள் தூரம் குறையும். இல்லையேல், இலங்கையின் கடற்றொழிலாளர்கள், நீர்கொழும்பு, திக்கோவிட்ட, பேருவளை மற்றும் மாத்தறை வழியாக மாலைதீவைச் சுற்றி நீண்ட பாதையில் சென்றே அரபிக்கடலில் தொழிலில் ஈடுபடுகின்றனர்.

அத்துடன் தற்போது இலங்கை கடற்றொழிலாளர்கள், அரபிக்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் வழியில் சட்டவிரோதமாக இந்திய கடல் எல்லைக்குள் நுழையும் போது இந்திய கடலோர காவல்படையினரால் தடுத்து வைக்கப்படுகின்றனர்.

இதனை மையப்படுத்தியே இலங்கையின் கோரிக்கை இந்தியாவிடம் விடுக்கப்பட்டுள்ளது. எனினும் இன்னும் பதில் வழங்கப்படவில்லை.

அதேநேரம் இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத கடற்றொழில் தொடர்பிலும் இன்னும் தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...