6 7
இலங்கைசெய்திகள்

ரணிலுடன் இணைந்தவர்கள் மீண்டும் வருவார்கள் : மொட்டுக்கட்சி பகிரங்கம்

Share

ரணிலுடன் இணைந்தவர்கள் மீண்டும் வருவார்கள் : மொட்டுக்கட்சி பகிரங்கம்

ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில், கைகளை உயர்த்தியப்படி மீண்டும் வருவார்கள் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston Fernando) தெரிவித்துள்ளார்.

தற்போதைய தீர்மானம் எடுத்தவர்களுக்கு நல்ல அரசியல் பாடம் புகட்டப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் கட்சியின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்காளர்களும் மகிந்த ராஜபக்சவுடன் இருப்பதாக அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

வெற்றி வேட்பாளரை முன்வைக்கும் ஒரே அரசியல் கட்சியாக பொதுஜன பெரமுன இருக்கும். அந்த வேட்பாளரின் அறிவிப்பு நாளை (7) வெளியிடப்படும்.

ஏனைய கட்சிகள் முன்வைத்த, அனைத்து வேட்பாளர்களும் பழையவர்கள் மற்றும் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் என்றும் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச திரைக்குப் பின்னால் இருந்து அனைத்தையும் கட்டுப்படுத்தும் நபர் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...