Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

Share

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் மகிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை எதிர்கொண்ட மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்த கடினமானதும், தீர்மானமிக்கதுமான தீர்வுகள் குறித்து அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்த தீர்மானங்களே நாட்டின் தற்போதைய வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்ததாக மகிந்த சிறிவர்தன தெரிவித்தார். சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நிலைமை மிகவும் கடுமையான நெருக்கடியில் இருந்த காலத்தில், அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் எதிர்காலத்தைக் கருத்தில் கொள்ளாமல், நாட்டுக்காக தேவையான கடினமான முடிவுகளை எடுக்க தயங்காமல் செயல்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை என்றால் இன்றைய வெற்றிகளெல்லாம் வீணாகி இருப்பதற்கான வாய்ப்பு இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போது பலமுறை ரணிலை நேரடியாக தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆலோசனைகள் பெற்றதாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

அத்துடன், அவருடன் பணிபுரிந்த காலத்தில் பல விடயங்களை தாம் கற்றுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தம்மை நிதி அமைச்சின் செயலாளராக நியமித்ததற்காக நன்றி தெரிவித்த அவர், ஜனாதிபதி ரணில் ஆரம்பித்த பொருளாதார மேலாண்மை திட்டத்தில் பல தீர்மானங்கள் தம்மாலேயே எடுக்கப்பட்டன எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகள் நாட்டின் தற்போதைய முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாக இருந்ததாகவும், அந்த அனுபவங்களில் பலவற்றை தாம் கற்றுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போது அந்த திட்டத்தை தொடர்வது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எடுத்துள்ள முடிவை “மிகச் சிறந்த தீர்மானம்” என அவர் பாராட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...