1 40
இலங்கைசெய்திகள்

வரலாற்றில் தோல்வியுற்ற அரசியல்வாதி ரணில்! சாகர காரியவசம் விமர்சனம்

Share

வரலாற்றில் தோல்வியுற்ற அரசியல்வாதி ரணில்! சாகர காரியவசம் விமர்சனம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தோல்வியுற்ற ஒரு அரசியல் தலைவர் என்று பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் விமர்சித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்குமாறு ரணில் வி்க்ரமிசிங்க விடுத்துள்ள வேண்டுகோள் தொடர்பில் கருத்து வௌியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்டுள்ள சாகர காரியவசம், கடந்த காலங்களில் ரணில் விக்ரமசிங்க ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியை அழித்தார். தனது சொந்தக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியையும் அடியோடு அழித்துவிட்டார்.

அவரது நீண்டநாள் கனவான ஜனாதிபதிப் பதவியை அடைந்து கொள்வதற்கு பொதுஜன பெரமுண கட்சி ஆதரவளித்தது. கடைசியில் எங்கள் கட்சியையும் அவர் அழித்துவிட்டார்.

ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்க ஆதரவளித்தது உண்மையில் எங்கள் கட்சி மேற்கொண்ட மிகப்பெரும் பிழையாகும். அதனால் தான் கடந்த தேர்தலில் நாங்கள் தோல்வியுற்றோம்.

அதே நேரம் ரணில் விக்ரமசிங்க வரலாற்றில் என்றைக்கும் தேர்தல்களில் வெற்றிபெற்றதேயில்லை. என்றைக்கும் அவர் தோல்வியுற்ற ஒரு அரசியல்வாதியே என்றும் சாகர காரியவசம் தொடர்ந்தும் விமர்சித்துள்ளார்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...