ரணிலின் திட்டம்
இலங்கைசெய்திகள்

சகல தரப்பினருக்கும் விடுத்துள்ள அழைப்பு: ரணிலின் திட்டம்

Share

ரணிலின் திட்டம்!

இலங்கையின் பொருளாதார நிலமை செப்டெம்பர் மாதத்துக்குள் ஸ்திரமடையும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்களுக்கான கூட்டு முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சகல தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் வர்த்தக சபை உறுப்பினர்கள், வர்த்தக சமூகம் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நேற்று முன்தினம் (29.06.2023) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி, இவ்வருடம் செப்டெம்பர் மாதத்துக்குள் இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையை அடையும் என்று நம்புகின்றோம்.

இதற்கிடையில், தனிநபர்கள் மற்றும் தொழில்துறையினர் உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதை உறுதிசெய்யும் வகையில் இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கும் , மக்களுக்கும் தெளிவுபடுத்துமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

பரவலான விளக்கங்களை வழங்குவதன் மூலம், வர்த்தக பங்குதாரர்களுக்கு மறுசீரமைப்பின் நுணுக்கங்களைப் புரிந்து கொள்ள முடியும். இந்த மறுசீரமைப்பு முயற்சியின் முதன்மையான விளைவாக எதிர்பார்க்கப்படுமளவுக்கு வட்டி விகிதங்களைக் குறைக்க முடியும்.

இதற்காக குறிப்பிட்டவொரு காலப்பகுதியைக் குறிப்பிட்ட முடியாது என்ற போதிலும், சில மாதங்களுக்குள் அதனை நடைமுறைப்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...