3 1
இலங்கைசெய்திகள்

அரசியல் அச்சத்தில் ரணில் – திரைமறைவில் அரங்கேற்றப்படும் சதி நடவடிக்கைகள்

Share

அரசியல் அச்சத்தில் ரணில் – திரைமறைவில் அரங்கேற்றப்படும் சதி நடவடிக்கைகள்

சமகால அரசியல் நெருக்கடி நிலைமைகளை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் அரசியல் மட்டத்தில் அதிகம் பேசப்படுகிறது.

இந்த பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் தொடர்பான தகவல்களை வெளியிடப் போவதாகவும் அநுர அரசாங்கம் தெரிவித்திருந்தது.

எனினும் இதுவரை எந்தவொரு தகவலும் வெளியிடாத நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில ஊடக சந்திப்பின் மூலம் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சில தகவல்களை வெளியிட்டிருந்தார்.

அவரின் ஊடக சந்திப்பு குறித்து அதிகம் எதிர்ப்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தாலும், அவரின் தகவல்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும், புதியதாகவும் எதுவும் இருக்கவில்லை.

இந்நிலையில் அவரின் முயற்சி படுதோல்வி அடைந்த நிலையில், தற்போது அவர் அமைதியாகி உள்ளார்.

இந்நிலையில் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பான தகவல்களை வெளியிடுவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார்.

ஏற்கனவே பாரம்பரியமிக்க அரசியல் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி, முழுமையாக அழிவடையும் நிலையில் உள்ளது.

Share
தொடர்புடையது
27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...

25 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விநியோகம் இனி QR முறை மூலம் மட்டுமே: பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு

இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை முழுமையாக முறைப்படுத்தும் நோக்கில், இனிவரும் காலங்களில் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் ‘தேசிய எரிபொருள்...

24 11
செய்திகள்அரசியல்இலங்கை

கே.பி.யின் கைது மற்றும் மகிந்த-கோட்டாபயவின் டீல்: சரத் பொன்சேகாவின் பகிரங்க விமர்சனம்!

விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் குமரன் பத்மநாதன் (கே.பி.) கைது விவகாரம் மற்றும் அது தொடர்பான...