17 7
இலங்கைசெய்திகள்

புதிய எம்.பிக்களுக்கு ரணில் ஆற்றப்போகும் விரிவுரை

Share

புதிய எம்.பிக்களுக்கு ரணில் ஆற்றப்போகும் விரிவுரை

தற்போது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க (ranil wickremesinghe)விரைவில் நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் விசேட விரிவுரையொன்றை ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வார இறுதியில் உயர்தர தொழில்முறை நண்பர்களுடன் நடத்திய சந்திப்பின் போது புதிய நாடாளுமன்றத்தில் புதியவர்களின் நடத்தை குறித்து கேலிக்கூத்தான கருத்துக்கள் வெளிவந்த போதே விக்ரமசிங்க இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்துள்ளார்.

விரைவில் விரிவுரை வழங்க யோசிக்கிறேன்

அக்கருத்துக்களை செவிமடுத்த ரணில், “நாடாளுமன்ற விவகாரம் குறித்து விரைவில் விரிவுரை வழங்க யோசிக்கிறேன்” என தெரிவித்ததுடன் எதனையும் கேலி செய்யவில்லை என்றும், அதற்கும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவை (Karu Jayasuriya)அழைக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்களை குறிவைத்து தனது விரிவுரையை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
நகைகளை வைத்து சூதாடிய குருக்கள்
இலங்கை

ஆலய நகைகளை திருடி சூதாடிய குருக்கள்!

கொழும்பு – கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் கடந்த மாதம் 29ஆம் திகதி ஆலய...

Court order 3
இலங்கை

புலிகளின் முகாம் தொடர்பில் வதந்தி – சந்தேக நபருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!

சமூக வலைத்தளங்களில் கிளிநொச்சி, பளை வனப்பகுதியில் விடுதலைப்புலிகளின் பயிற்சி முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக போலித் தகவலை வௌியிட்ட...

Accidentkojioh
இலங்கை

திருமணத்திற்கு 2 நாள் வெளிநாடு செல்ல 3 நாள் இளைஞர் விபத்தில் பலி!

மாத்தறை, அக்குரஸ்ஸ பகுதியில் சம்பவித்த கோர விபத்தில் இரண்டு தினங்களில் திருமணத்திற்கு தயாராக இருந்த 25...

ஷிரான் பாசிக்
இலங்கை

வறுமைக்கோட்டிலிருந்து டுபாய் வரை ஷிரான் பாசிக் தொடர்பில் வெளியாகும் உண்மைகள்!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் தொடர்பில் பல தகவல்கள் தற்போது வெளியாகிய வண்ணம் உள்ளன....