8 16
இலங்கைசெய்திகள்

சிவப்பு அரிசி தட்டுப்பாட்டிற்கு காரணம் யார் தெரியுமா…!

Share

தற்போது உள்ளூர் சந்தையில் சிவப்பு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க (wasantha samarasinghe)ஒப்புக்கொண்டுள்ளார், அத்துடன் இந்த நெருக்கடிக்கு முன்னாள் அரசாங்கமே காரணம் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, முன்னாள் அரசாங்கம் தலா ஒருவருக்கு 20 கிலோ அரிசியை இலவசமாக விநியோகித்ததன் விளைவாக இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இன்று(08) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் சமரசிங்க தெரிவித்தார்.

சிவப்பு அரிசியை உட்கொள்ளாத பொதுமக்களுக்கு ரணில் விக்ரமசிங்க (ranil wickremesinghe)தலைமையிலான அரசாங்கம் சிவப்பு அரிசியை விநியோகித்ததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சமரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கும், உள்ளூர் சந்தைக்கு தொடர்ந்து அரிசி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.

இலங்கையில் சிவப்பு அரிசி தட்டுப்பாடு தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் வசந்த சமரசிங்க இதனைத் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
k d
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை.

இலங்கை மக்களுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல்...

G.L.Peiris
இலங்கை

அனைத்து மக்களும் ஒன்றிணைந்தால் சாத்தியம் என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர், இந்த நிலையில் இது...

dengue
இலங்கை

அதி அபாய மட்டத்தில் டெங்கு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

2026 ஆம் வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 68,071 ஆக பதிவாகி உள்ளதாக...

money
இலங்கை

அதிரடியாக உயர்த்தப்பட்ட சில கட்டணங்கள்.

  வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ,...