6 27
இலங்கைசெய்திகள்

அனுர, சஜித் பிரேமதாசவிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை

Share

அனுர, சஜித் பிரேமதாசவிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டாம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரிடம் ஜனாதிபதி கோரியுள்ளார்.

தேர்தல் பிரசார கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து வாபஸ் பெற்றுக்கொண்டு ஐந்து ஆண்டுகளுக்கு தமக்கு ஆதரவளிக்குமாறு கோரியுள்ளார்.

சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, ஹர்ஸ டி சில்வா, சுனில் ஹந்துனெத்தி போன்றவர்களினால் இந்த நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது அரசாங்கம் கடந்த 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் பொருளாதாரத்தில் பாரிய முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அரசியல் மேடைகளில் மக்களின் கஸ்டங்களை பற்றி பேசுவது பொருத்தமற்றது என ஜனாதிபதி விமர்சனம் செய்துள்ளார்.

அனுரகுமார மற்றும் சஜித் ஆகியோர் இதனை செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் கஸ்டங்களை புரிந்து கொண்டிருந்தால் நெருக்கடியான தருணத்தில் இந்த நாட்டை பொறுப்பேற்றிருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை திருத்தினால் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களை இழக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
11 1
செய்திகள்உலகம்

மார்ச் 3-இல் தோன்றும் ‘இரத்த நிலவு’: 58 நிமிடங்கள் நீடிக்கும் 2026-இன் முதல் சந்திர கிரகணம்!

2026 ஆம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் எதிர்வரும் மார்ச் 3-ஆம் திகதி நிகழவுள்ளதாக சர்வதேச...

goldsteal cleanup
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலவாக்கலையில் நூதனத் திருட்டு – சிசிடிவி காட்சி வெளியீடு!

தலவாக்கலை பிரதான நகரில் அமைந்துள்ள பிரபல நகைக்கடை ஒன்றில், நேற்று (24) பகல் வேளையில் வாடிக்கையாளர்...

10 1
செய்திகள்உலகம்

கால்பந்து மைதானம் அளவுள்ள பிரம்மாண்ட பவளம்! கிரேட் பேரியர் ரீஃபில் தாய்-மகள் குழுவின் வரலாற்றுச் சாதனை.

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில், இதுவரை ஆவணப்படுத்தப்பட்டவற்றிலேயே உலகின் மிகப்பெரிய பவளக் காலனியை...

09 1
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் பின்னணி: முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே அதிரடி கைது – 72 மணிநேரத் தடுப்புக் காவல்!

இலங்கை வரலாற்றில் மிகக் கொடூரமான தாக்குதலான 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில், முன்னாள்...