6 27
இலங்கைசெய்திகள்

அனுர, சஜித் பிரேமதாசவிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை

Share

அனுர, சஜித் பிரேமதாசவிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டாம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரிடம் ஜனாதிபதி கோரியுள்ளார்.

தேர்தல் பிரசார கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து வாபஸ் பெற்றுக்கொண்டு ஐந்து ஆண்டுகளுக்கு தமக்கு ஆதரவளிக்குமாறு கோரியுள்ளார்.

சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, ஹர்ஸ டி சில்வா, சுனில் ஹந்துனெத்தி போன்றவர்களினால் இந்த நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது அரசாங்கம் கடந்த 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் பொருளாதாரத்தில் பாரிய முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அரசியல் மேடைகளில் மக்களின் கஸ்டங்களை பற்றி பேசுவது பொருத்தமற்றது என ஜனாதிபதி விமர்சனம் செய்துள்ளார்.

அனுரகுமார மற்றும் சஜித் ஆகியோர் இதனை செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் கஸ்டங்களை புரிந்து கொண்டிருந்தால் நெருக்கடியான தருணத்தில் இந்த நாட்டை பொறுப்பேற்றிருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை திருத்தினால் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களை இழக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
Untitled 2025 11 11T193051.794
செய்திகள்உலகம்

ஆப்பிள் X இஸ்ஸி மியாகே இணையும் ‘iPhone Pocket’: 3D-பின்னல் தொழில்நுட்பத்தில் 8 நிறங்களில் நவம்பர் 14இல் உலகளவில் அறிமுகம்!

தொழில்நுட்ப ஜாம்பவான் ஆப்பிள் நிறுவனமும், ஜப்பானிய ஃபேஷன் நிறுவனமான இஸ்ஸி மியாகேவும் (ISSEY MIYAKE) இணைந்து...

69119dd9ad62e.image
செய்திகள்உலகம்

தாய்வானில் ஃபங்-வோங் சூறாவளிப் பாதிப்பு: 8,300க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்; பாடசாலைகள் மூடல்!

தாய்வானில் ஏற்பட்ட ஃபங்-வோங் (Fung-Wong) சூறாவளியைத் தொடர்ந்து, 8,300க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக...

17597546 bridge
செய்திகள்உலகம்

சீனாவில் திடீர் அதிர்ச்சி: சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட ஹொங்கி பாலம் இடிந்து ஆற்றில் விழுந்தது! – கட்டுமானத் தரம் குறித்துக் கேள்விகள்!

தென்சீனாவில் சில மாதங்களுக்கு முன்னர் மட்டுமே திறக்கப்பட்ட ஹொங்கி பாலத்தின் (Hongqi Bridge) பெரும்பகுதி நேற்று...

9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் விபத்து: 2 தனியார் பஸ்கள் மோதியதில் 5 பேர் காயம்!

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் பொலன்னறுவை, பெதிவெவ பகுதியில் 21ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற...