இலங்கைசெய்திகள்

நேருக்கு நேர் மோதி கோர விபத்தில் சிக்கிய பேருந்துகள்

24 66737f1f15be2
Share

நேருக்கு நேர் மோதி கோர விபத்தில் சிக்கிய பேருந்துகள்

கடுவெல – ரனால பிரதேசத்தில் தனியார் பேருந்தும், மாணவர் பேருந்தொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானமைக்கு இரண்டு பேருந்துகளையும் கவனக்குறைவாக செலுத்தியமையே காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடுவெல – ரனால பிரதேசத்தில் தனியார் பேருந்தும், மாணவர் பேருந்தொன்றும் நேற்று (19.06.2024) நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 50 பேர் காயமடைந்திருந்தனர்.

கொழும்பில் இருந்து லபுகமுவ நோக்கி மாணவர்களை ஏற்றிச் சென்ற மாணவர் பேருந்தும் எம்பிலிப்பிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டிருந்தது.

இந்த விபத்தில் காயமடைந்த பாடசாலை மாணவர்கள் உட்பட 50 பேர் நவகமுவ மற்றும் அவிசாவளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹன்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 5 பேர் மாலை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக நவகமுவ வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த விபத்து இடம்பெற்றபோது அப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், விபத்தில் இரண்டு பேருந்துகளின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

ஹங்வெல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரதீப் குமாரவின் பணிப்புரையின் பேரில் பொலிஸ் சார்ஜன்ட் ஏக்கநாயக்க (54580) உள்ளிட்ட அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...