இலங்கைசெய்திகள்

நேருக்கு நேர் மோதி கோர விபத்தில் சிக்கிய பேருந்துகள்

Share
24 66737f1f15be2
Share

நேருக்கு நேர் மோதி கோர விபத்தில் சிக்கிய பேருந்துகள்

கடுவெல – ரனால பிரதேசத்தில் தனியார் பேருந்தும், மாணவர் பேருந்தொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானமைக்கு இரண்டு பேருந்துகளையும் கவனக்குறைவாக செலுத்தியமையே காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடுவெல – ரனால பிரதேசத்தில் தனியார் பேருந்தும், மாணவர் பேருந்தொன்றும் நேற்று (19.06.2024) நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 50 பேர் காயமடைந்திருந்தனர்.

கொழும்பில் இருந்து லபுகமுவ நோக்கி மாணவர்களை ஏற்றிச் சென்ற மாணவர் பேருந்தும் எம்பிலிப்பிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டிருந்தது.

இந்த விபத்தில் காயமடைந்த பாடசாலை மாணவர்கள் உட்பட 50 பேர் நவகமுவ மற்றும் அவிசாவளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹன்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 5 பேர் மாலை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக நவகமுவ வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த விபத்து இடம்பெற்றபோது அப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், விபத்தில் இரண்டு பேருந்துகளின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

ஹங்வெல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரதீப் குமாரவின் பணிப்புரையின் பேரில் பொலிஸ் சார்ஜன்ட் ஏக்கநாயக்க (54580) உள்ளிட்ட அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...