இலங்கைசெய்திகள்

ரணிலுக்கான ஆதரவுக்கூட்டம் : தலதா அத்துகோரள சென்றமை குறித்து சர்ச்சை

Share
15
Share

ரணிலுக்கான ஆதரவுக்கூட்டம் : தலதா அத்துகோரள சென்றமை குறித்து சர்ச்சை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) ஆதரிக்கும் நிலைப்பாட்டை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள நிராகரித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் மாகாணசபை உறுப்பினர்களுக்கான செயலமர்வு, பத்தரமுலவில் உள்ள வோட்டர்ஸ் எட்ஜ் விருந்தகத்தில் நேற்று(31) இடம்பெற்றது.

இந்த தருணத்தில் விருந்தகத்தில் இருந்து தலதா அத்துக்கோரள வெளியே வந்தபோது அங்கு செய்தி சேகரிப்புக்காக காத்திருந்த செய்தியாளர்கள், தலதாவிடம் கேள்விகளை எழுப்பினர்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பீர்களா என்ற வினாவை அவர்கள் தொடுத்தனர். எனினும் தாம் வேறொரு நிகழ்ச்சிக்கு வந்ததாகவும், ஜனாதிபதி விக்ரமசிங்கவை ஆதரிக்கும் கூட்டத்துடன் தாம் இருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் ஜனாதிபதியுடன் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. கடந்த காலங்களில் அவருடன் பேசி இருக்கிறேன். இன்றும் அதைச் செய்கிறேன். நாளையும் அப்படித்தான் இருக்கும் என்று ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...