tamilni 222 scaled
இலங்கைசெய்திகள்

சர்வதேச ஊடகங்களின் தலைப்பு செய்தியாக ராஜபக்ச சகோதரர்கள்

Share

சர்வதேச ஊடகங்களின் தலைப்பு செய்தியாக ராஜபக்ச சகோதரர்கள்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர்களான மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களே பொறுப்பு என உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்ற கட்டணமாக மனுதாரர்களுக்கு தலா ஒன்றரை லட்சம் செலுத்த வேண்டும் என அபராதம் விதிக்கப்பட்டது. எனினும், அந்த முடிவு அதை விட வலுவான அரசியல் அறிக்கையாக இருந்தது.

அதன் மூலம், ராஜபக்ச ஆட்சி நாட்டிற்கு கடுமையான அழிவு பற்றிய முடிவை வழங்கியுள்ளதாக கூறப்பட்டது.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலித்து, தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே, ராஜபக்சர்கள் விமான பயணங்கள் மேற்கொள்ள கூட தடை விதிக்கப்பட்டிருந்தாலும், சில சமயங்களில் அதை தளர்த்தி வெளிநாடுகளுக்கு பயணம் செய்தனர்.

எனினும் இந்த தீர்ப்பு குறித்து சர்வதேச ஊடகங்கள் நேற்று விசேட செய்திகளை வெளியிட்டிருந்தன.

பல சர்வதேச ஊடகங்கள் இதனை தலைப்பு செய்தியாக வெளியிட்டிருந்தது.

பிபிசி உலகச் சேவையும் தனது மாலைச் செய்தியில் இது பற்றிய விவரங்களை அளித்ததுடன், 2022ஆம் ஆண்டு போராட்டத்தை பற்றியும் நினைவூட்டியது.

இதேவேளை, பல சர்வதேச செய்தி வலையமைப்புகள் மற்றும் இணையத்தளங்களும் இந்த செய்தியை வெளியிட்டிருந்தன.

குறிப்பாக நேற்றைய தினம் இந்தியாவின் அச்சு ஊடகங்களில் இது பற்றிய செய்திக்கு அதிக இடம் கிடைத்தது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 691b58dca001e
செய்திகள்அரசியல்இலங்கை

பசில் ராஜபக்சவுக்கு நவ. 21இல் நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு: அமெரிக்காவில் சிகிச்சையிலுள்ளவர் திரும்புவாரா என்ற சந்தேகம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நிறுவனர் பசில் ராஜபக்ச, சட்டவிரோதமாகப் பெறப்பட்ட ரூ. 50 மில்லியன்...

25 691be54fdfdbd
செய்திகள்அரசியல்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: முறையாகப் பதிவுசெய்யப்பட்ட விகாரை அகற்றப்பட்டதைக் கண்டித்து அமரபுர மகா நிக்காய தலைமை தேரர் ஜனாதிபதிக்குக் கடிதம்!

திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில், இலங்கை அமரபுர மகா நிக்காயவின் தலைமை நாயக்க...

Vijayakanth Viyaskanth SRH IPL 2024 1
செய்திகள்விளையாட்டு

பாகிஸ்தான் இருபதுக்கு 20 முத்தரப்புத் தொடர்: இளம் சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைவு!

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 முத்தரப்புத் தொடருக்கான இலங்கை தேசிய ஆடவர் அணியில், இளம் சுழற்பந்து...

67e090cde912a.image
உலகம்செய்திகள்

கனடாவின் நகர மண்டபங்களில் பாலஸ்தீனியக் கொடி: இஸ்ரேல் ஆதரவுக் குழுவின் தஃப்சிக் அமைப்பு தடை கோரி நீதிமன்றம் நாடியது!

கனடாவின் பல நகரங்களின் நகர மண்டபங்களில் பாலஸ்தீனியக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து...