1 49
இலங்கைசெய்திகள்

பழிவாங்கப்படும் ராஜபக்சர்கள்! பாதாள குழுக்கள் தொடர்பில் சுமத்தப்படும் குற்றச்சாட்டு

Share

தற்போதைய அரசாங்கம் தமது இயலாமையை மறைத்துக் கொள்வதற்கு பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பான பழி ராஜபக்சர்கள் மீது சுமத்தப்படுகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக குற்றம் சுமத்தியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் மீதான அடக்குமுறைகளையும், அச்சுறுத்தலையும் அரசாங்கம் தற்போது தீவிரப்படுத்தியுள்ளது என்றும், நாமல் ஊருக்கு சென்றால் புதைகுழிக்கு செல்ல நேரிடும் என்று அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளமை மிகவும் பாரதூரமானது எனவும் கூறியுள்ளார்

அவர் மேலும், 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பல சிறந்த திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அவற்றை தற்போது குறிப்பிடப்போவதில்லை. ஏனெனில் அவற்றை ஆளும் தரப்பின் 158 உறுப்பினர்கள் குறிப்பிடுவார்கள்.

குறைகளை சுட்டிக்காட்டுகிறேன். தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் 69 இலட்ச மக்களாணையை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

ஏனெனில் எதிர்வரும் ஓரிரு மாதங்களில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைப்பெறவுள்ளது. கடந்த காலங்களில் பொதுஜன பெரமுன பற்றி பேசப்படவில்லை. ஆனால் தற்போது அதிகளவில் பேசப்படுகிறது.

அரசாங்கம் எதிர்க்கட்சிகள் மீதான அடக்குமுறை மற்றும் அச்சுறுத்தல்களை தற்போது தீவிரப்படுத்தியுள்ளது.

அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் ஒருவர் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச கிராமத்துக்குச் சென்றால் புதைகுழிக்கு செல்ல நேரிடும் என்று குறிப்பிடுகிறார்.

பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. இந்த பழியையும் அரசாங்கம் கடந்த அரசாங்கங்கள் மீது சுமத்துகிறது.

இது மிகவும் பாரதூரமானது. இது பத்தரமுல்லை அலுவலகத்தின் திட்டமா, மக்கள் விடுதலை முன்னணியின் உண்மையான முகம் தற்போது வெளிவருகிறது” என்றார்.

Share
தொடர்புடையது
images 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீழ்ச்சியடையும் கல்வித் தரம்: முல்லைத்தீவு வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தைப் பாதுகாக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தில் நிலவும் பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்து,...

26 695661e2a824f
செய்திகள்அரசியல்இலங்கை

மில்கோ நிறுவன வரலாற்றில் சாதனை இலாபம்: ஊழியர்களுக்கு போனஸ் வழங்கினார் அமைச்சர் லால்காந்த!

இலங்கையின் மில்கோ (Milco) நிறுவனம் தனது வரலாற்றிலேயே மிக உயர்ந்த இலாபத்தைப் பதிவு செய்துள்ளதாக விவசாய,...

images 1
செய்திகள்இந்தியா

இந்தியாவிற்கு வருகிறது BTS! மும்பையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி – ஆர்மி ரசிகர்கள் உற்சாகம்!

உலகப் புகழ்பெற்ற தென்கொரிய இசைக்குழுவான BTS (Bangtan Boys), தங்களின் உலகளாவிய இசைப் பயணத்தின் (World...

gun shooting 1
செய்திகள்அரசியல்இலங்கை

2025-ல் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் பலி – பொலிஸார் அதிரடித் தகவல்!

கடந்த (2025) ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியதாகவும் அதில் 60 பேர் உயிரிழந்ததுடன்,...