நாடளாவிய ரீதியில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்தும் நோக்கில் இன்று (27) நள்ளிரவு முதல் அடையாளப் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
குறித்த அடையாள வேலைநிறுத்தம் நாளை (28) நள்ளிரவு வரை தொடரத் திட்டமிடப்பட்டுள்ளது.
ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம், ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகள் சங்கம், லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் இன்ஜினியர் யூனியன், ரயில்வே ஊழியர் சங்கம், ரயில் தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கம் உள்ளிட்ட 30 இற்கும் மேற்பட்ட ரயில்வே தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன என்று ரயில்வே தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கமைய அனைத்து ஊழியர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கவுள்ளனர்.
#SriLankaNews
Leave a comment