17 22
இலங்கைசெய்திகள்

இனிப்பு பண்டங்கள் மற்றும் உணவுகளின் தரம்! மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்

Share

இனிப்பு பண்டங்கள் மற்றும் உணவுகளின் தரம்! மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்

இறக்குமதி செய்யப்படும் இனிப்பு பண்டங்கள் மற்றும் உணவுகளின் தரம் தொடர்பில் ஆராய்வதற்கான முறைமை ஒன்று தயாரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தரமற்ற உணவுகளை உட்கொள்வதன் காரணமாக நுகர்வோர் இன்னல்களுக்கு முகங்கொடுக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மருத்துவ சபையின் தலைவர் விசேட வைத்தியர் சுரந்த பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,”சந்தைக்குக் கொண்டு வரப்படும் இனிப்பு பண்டங்கள் மற்றும் உணவுகளின் தரம் தொடர்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும்.

தரமற்ற உணவுகளை உட்கொள்வதன் காரணமாக நுகர்வோர் இன்னல்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

இதுதவிர, உணவு ஒவ்வாமை, சுவாச நோய் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு மக்கள் முகங்கொடுக்கின்றனர்.

இல்லையெனில் அவற்றால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களைத் தவிர்த்துக் கொள்ள முடியாது” என விசேட வைத்தியர் சுரந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
kurunagale
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யப் பெண்ணின் 3 இலட்சம் பெறுமதியான தொலைபேசி திருட்டு: உனவட்டுனவில் ஒருவர் கைது!

வெளிநாட்டுப் பெண்ணிடம் தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்தே...

articles2FzfwGOGwTVgau0U5wzDGJ
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் பிரிவினைவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல்: உயிரிழப்பு 193 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 12 நகரங்களில் நேற்று (31) பலூச் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த...

nipah scare kyrgyzstan bans animal products imports from v0 KAIhqUTvKj
செய்திகள்உலகம்

இந்திய இறைச்சி மற்றும் விலங்குப் பொருட்களுக்கு கிர்கிஸ்தான் தடை: நிபா வைரஸ் அச்சமே காரணம்!

இந்தியாவில் நிபா (Nipah) வைரஸ் பரவல் நிலவுவதாகக் கூறி, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி மற்றும்...

image cb55c225d6
செய்திகள்இலங்கை

சந்தையில் எகிறியது இஞ்சியின் விலை: ஒரு கிலோ 2,000 ரூபாவைத் தாண்டியது!

இலங்கையின் உள்ளூர் சந்தைகளில் இஞ்சியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக நுகர்வோரும் வியாபாரிகளும்...