7 23
இலங்கைசெய்திகள்

அரிசிக்கு இனி QR குறியீடு – உற்பத்தியாளர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

Share

அரிசிக்கு இனி QR குறியீடு – உற்பத்தியாளர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு தொடருமானால் அரிசிக்கும் QR குறியீடு கொண்டு வர வேண்டிய நிலை ஏற்படும் என திஸ்ஸமஹாராம அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் டபிள்யூ. எச். காமினி தெரிவித்துள்ளார்.

அரிசி தட்டுப்பாடு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “இலங்கையில் அரிசி மற்றும் நெல் விலைகள் எப்போதும் இரண்டு அல்லது மூன்று பெரிய ஆலை உரிமையாளர்களால் தீர்மானிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு அரசாங்கமும் அவர்கள் சொன்ன விலைக்கு கீழ் வர வேண்டும். இந்தமுறையும் அரிசியின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க முடிந்தது.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் அரிசி உற்பத்தியாளர்கள் எப்போதும் விலைக் கட்டுப்பாட்டின் கீழ் அரிசியை வாங்குகின்றனர். ஆனால், கடைவீதிகளில் விலைவாசி உயர்ந்துள்ளதால், நாட்டில் கிடைக்கும் அரிசியை அதிக விலை கொடுத்து வாங்கி சேமித்து வருகின்றனர்.

அப்படியானால், சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் குறைவாக வாங்குவார்கள். ஏனெனில் விலைக் கட்டுப்பாட்டின் கீழ் அரிசியை வாங்கவும் விற்கவும் முடியாது.

இப்போதும் கூட, அறுபது சதவீதத்திற்கும் (60%) அரிசி சிறு மற்றும் நடுத்தர வணிகர்களால் சந்தைக்கு வழங்கப்படுகிறது. இவர்கள் கைவசம் பெரிய அளவில் நெல் இல்லை. சிறு, குறு மற்றும் நடுத்தர மக்கள் நெல்லை வாங்கி தினமும் வெட்டி சந்தைக்கு விடுகின்றனர்.

இதற்கிடையில், பெரிய அளவில் நெல் இருப்பு வைத்துள்ளவர்கள், சிறு, குறு வியாபாரிகளின் நெல் கையிருப்பு தீர்ந்தால் தான், நெல் இருப்புகளை வெளியிட துவங்குகின்றனர். நெல் இருப்பு வைத்துள்ள சிலருக்கு ஆலைகள் கூட இல்லை.

இது ஒரு மோசடி. இப்படி செயற்கை அரிசி தட்டுப்பாட்டைக் காட்டிவிட்டு, ஒரே நேரத்தில் அரிசி விலையை பெருந்தொழில் செய்பவர்கள் உயர்த்துகிறார்கள். அதன் மூலம் அரிசியுடன் மறைத்து வைத்திருக்கும் நெல்லை விற்பனை செய்து அதிக விலைக்கு விற்று பெரும் இலாபம் ஈட்டுகின்றனர்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...