இலங்கைசெய்திகள்

கட்டார் நிறுவனத்திடமிருந்து பெட்ரோலிய கொள்வனவு: அரசாங்கத்தின் அவசர நடவடிக்கை

Share
14 2
Share

கட்டார் நிறுவனத்திடமிருந்து பெட்ரோலிய கொள்வனவு: அரசாங்கத்தின் அவசர நடவடிக்கை

கட்டார் அரசாங்கத்திற்கு சொந்தமான ‘கட்டார் எனர்ஜி’ நிறுவனத்திடம் இருந்து இரண்டு பெட்ரோலியப் பொருட்களை வாங்குவதற்கு அரசாங்கம் அவசரமாக நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டி.ஏ. ராஜகருணா குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் காலத்தில் ஏற்படக்கூடிய அனைத்து விதமான எரிசக்தி நெருக்கடிகளையும் தடுக்கும் விதத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.

பெட்ரோலியப் பொருட்களை குறைந்த விலையில் கொள்வனவு செய்வதற்கு ‘கட்டார் எனர்ஜி’ நிறுவனத்துடன் இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டுள்ளன.

‘கட்டார் எனர்ஜி’ ஒரு அரசுக்கு சொந்தமான நிறுவனம் என்பதால் அத்தகைய ஒப்பந்தத்தின் கீழ் எரிசக்தி கொள்முதல் சாத்தியமாகும் என ராஜகருணா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன்(UAE) இதே போன்ற திட்டங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அந்நாட்டில் தனியார் நிறுவனங்கள் மட்டுமே பெட்ரோலிய விற்பனையில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...