14 2
இலங்கைசெய்திகள்

கட்டார் நிறுவனத்திடமிருந்து பெட்ரோலிய கொள்வனவு: அரசாங்கத்தின் அவசர நடவடிக்கை

Share

கட்டார் நிறுவனத்திடமிருந்து பெட்ரோலிய கொள்வனவு: அரசாங்கத்தின் அவசர நடவடிக்கை

கட்டார் அரசாங்கத்திற்கு சொந்தமான ‘கட்டார் எனர்ஜி’ நிறுவனத்திடம் இருந்து இரண்டு பெட்ரோலியப் பொருட்களை வாங்குவதற்கு அரசாங்கம் அவசரமாக நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டி.ஏ. ராஜகருணா குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் காலத்தில் ஏற்படக்கூடிய அனைத்து விதமான எரிசக்தி நெருக்கடிகளையும் தடுக்கும் விதத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.

பெட்ரோலியப் பொருட்களை குறைந்த விலையில் கொள்வனவு செய்வதற்கு ‘கட்டார் எனர்ஜி’ நிறுவனத்துடன் இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டுள்ளன.

‘கட்டார் எனர்ஜி’ ஒரு அரசுக்கு சொந்தமான நிறுவனம் என்பதால் அத்தகைய ஒப்பந்தத்தின் கீழ் எரிசக்தி கொள்முதல் சாத்தியமாகும் என ராஜகருணா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன்(UAE) இதே போன்ற திட்டங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அந்நாட்டில் தனியார் நிறுவனங்கள் மட்டுமே பெட்ரோலிய விற்பனையில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...