13 2
இலங்கைசெய்திகள்

சிறை செல்ல தயாரான நாமலை ஏமாற்றிய அநுர அரசு

Share

சிறை செல்ல தயாரான நாமலை ஏமாற்றிய அநுர அரசு

நிதி மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, குற்றப் புலனாய்வு பிரிவு நிதி மற்றும் வணிகக் குற்றப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸிற்கான விமானக் கொள்முதல் பரிவர்த்தனையில் இடம்பெற்ற நிதி மோசடி குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் நோக்கில் நாமல் அழைக்கப்பட்டார்.

கடந்த புதன்கிழமை அவர் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த நிலையில், அன்றைய தினம் அரச விடுமுறை நாள் என்பதால் தான் கைது செய்யப்படலாம் என நாமல் ராஜபக்ச எதிர்பார்த்திருந்தார்.

தான் கைது செய்யப்பட்டால், அது தனக்கு திருப்புமுனையாக இருக்கும் என நாமல் எதிர்பார்த்திருந்தார். அதன்மூலம் மக்கள் மத்தியில் அனுதாப அலையை பெற்றுக்கொள்ள திட்டமிட்டிருந்தார்.

எனினும் அன்று நாமல் கைது செய்யப்படவில்லை, சுமார் ஐந்து மணி நேரம் வாக்குமூலம் அளித்த பிறகு வெளியேறியிருந்தார். இது அவரின் அடுத்தகட்டத்திற்கான திட்டத்திற்கான மேலும் ஏமாற்றமாக அமைந்திருந்தது.

அன்றையதினம் நாமல் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் பரபரப்பாக தகவல்கள் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...