32 7
இலங்கைசெய்திகள்

பிரமிட் திட்டத்தின் ஊடாக பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை குவித்த வைத்தியர்

Share

பிரமிட் திட்டத்தின் ஊடாக பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை குவித்த வைத்தியர்

பிரமிட் திட்டமொன்றின் மூலம் ஈட்டப்பட்ட வருமானத்தைக் கொண்டு 18 கோடி ரூபா பெறுமதியான சொத்து கொள்வனவு செய்த வைத்தியர் ஒருவரை கைது செய்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்துள்ளது.

ஒன்மெக்ஸ் டி.ரீ என்ற பிரமிட் கொடுக்கல் வாங்கல் திட்டத்தின் ஊடாக குறித்த மருத்துவர் பணம் சம்பாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்க வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் வைத்தியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒன்மெக்ஸ் மோசடியுடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் ஒருவரும், நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினருமான சம்பத் சந்தருவான் என்பவரின் பெயருக்கு இந்த வைத்தியரின் சொத்து ஒரே நாளில் கைமாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

18 கோடி ரூபா பெறுமதியான இந்த சொத்து பிரமிட் வர்த்தகம் மூலம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த வைத்தியரின் சொத்துக்களை கைமாற்றுவதற்கு தடை விதிக்குமாறு அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றில் கோரியுள்ளார்.

இருப்பினும், விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் காரணத்தினால் சந்தேகநபருக்கு பிணை வழங்குமாறு அவரது சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரான வைத்தியர் சொத்துக்களை கைமாற்றுவதற்கு தடை விதித்த நீதிமன்றம், 15 கோடி ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளின் அடிப்படையில் வைத்தியருக்கு பிணை வழங்கியுள்ளது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...