tamilni 178 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டு மக்களுக்கு நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு

Share

நாட்டு மக்களுக்கு நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு

பிரமிட் திட்டங்களில் ஈடுபடும் நபர்கள், திட்டத்தை பிரபலப்படுத்த மத நிகழ்வுகளை கூட ஏற்பாடு செய்கிறார்கள் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கேகாலை – ருவன்வெல்ல பகுதியில் நேற்று (13.08.2023) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், சமூக அடையாளமாக மாறியுள்ள இந்த பிரமிட் திட்டத்தை தடுக்க தற்போதுள்ள சட்டங்களை அதிகபட்சமாக நடைமுறைப்படுத்துவதுடன், தேவைப்பட்டால் சட்டங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும்.

இவ்வாறான திட்டங்களை தடை செய்வதையோ அல்லது அதற்கான தண்டனையையோ பெற்றுக் கொடுப்பதை விட இந்த மோசடிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, இவற்றுக்கு பலியாகாமல் இருக்க பொது மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.

1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் S 83(C)இன் படி பிரமிட் திட்டங்கள் ஏற்கனவே இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளது.

பிரமிட் திட்டம் எந்த வகையிலும் சட்டப்பூர்வமானது அல்ல. இந்த சமுதாயத்தின் படித்த குடிமக்களாக, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது உங்கள் கடமை.

இது ஒரு வகையில் சமூக வைரஸ். எங்களிடம் போதுமான பிரச்சினைகள் உள்ளன, எங்களுக்கு எந்த புதிய சிக்கல்களும் தேவையில்லை. இந்த திட்டங்களில் ஈடுபடும் நபர்கள் இறுதியில் சிக்கலில் விழுகிறார்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், எந்தவொரு பிரமிட் திட்டங்களிலும் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் நாட்டு மக்கள் அனைவருக்கும் அவர் அவசர அறிவிப்பொன்றையும் வழங்கியுள்ளார்.

இதேவேளை பிரமிட் திட்டங்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என இலங்கை மத்திய வங்கி பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...