10 15
இலங்கைசெய்திகள்

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் விடுதலை

Share

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் விடுதலை

தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் (Allu Arjun) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அல்லு அர்ஜுன் இன்று (14.12.2024) காலை சஞ்சல்குடா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

புஷ்பா 2 படத்தை திரையரங்கில் பார்க்க வந்த பெண், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் நேற்று கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் (Allu Arjun) கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புஷ்பா 2 பட வெளியீட்டின் போது பெண் ஒருவர் திரையரங்கில் உயிரிழந்த வழக்கில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹைதராபாத் காவல்துறையினர் இன்று (13.12.2024) அல்லு அர்ஜுனை கைது செய்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு புஷ்பா 2 திரைப்படம் வெளியானது. திரையரங்கில் கூட்ட நெரிசலில் சிக்கி 35 வயது பெண் உயிரிழந்தார்.

இவரது இறப்பிற்கு காரணம் அல்லு அர்ஜுன்தான் என புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அர்ஜுனை கைது செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....