tamilni 392 scaled
இலங்கைசெய்திகள்

பெப்ரவரி மாதமளவில் மின்சாரக் கட்டணத்தில் மாற்றம்

Share

பெப்ரவரி மாதமளவில் மின்சாரக் கட்டணத்தில் மாற்றம்

மின்சார கட்டணத்தை குறைப்பது குறித்த யோசனை எதிர்வரும் 15 ஆம் திகதி ஒப்படைக்கப்படும் என இலங்கை மின்சார சபை உறுதியளித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களும் கோரப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

அதன் பின்னர் மின்சார கட்டணங்களை குறைப்பது தொடர்பிலான பரிந்துரைகள் முன்வைக்கப்படும் என ஆணைக்குழுவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரம் அளவில் மின்சார கட்டணங்களை குறைப்பது குறித்த யோசனைகளுக்கு அனுமதி பெற்றுக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை மின்சார சபையின் செயல்பாடுகளை சுயாதீனமான நிறுவனம் ஒன்றின் மூலம் கணக்காய்வு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சுயதீன கணக்காய்வு நடவடிக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் அளவில் பூர்த்தி ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...