18 2
இலங்கைசெய்திகள்

சஜித்தின் கூட்டத்தில் இருந்து இடைநடுவில் எழுந்து சென்ற பொதுமக்கள்

Share

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் இடைநடுவில் பொதுமக்கள் எழுந்து சென்றதன் காரணமாக சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளின் மே தினக் கூட்டம் நேற்றைய தினம்(01) தலவாக்கலை நகரில் நடைபெற்றது.

இதன் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இடைநடுவில் உரையாற்றினார். அவருக்குப்பின் இன்னும் பலர் உரையாற்றக் காத்திருந்தனர்.

எனினும் சஜித் பிரேமதாசவின் உரை முடிந்த கையோடு பொதுமக்கள் கூட்டம் நடைபெற்ற மைதானத்தை விட்டும் எழுந்து செல்லத் தொடங்கியுள்ளனர்.

இதன் காரணமாக அடுத்து உரையாற்ற வந்த கட்சியின் செயற்பாட்டு ஒருங்கிணைப்பாளர் துஷார இந்துனில் , பெரும் அசௌகரியத்தை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.

அதனையடுத்து கூட்டத்தின் தொகுப்பாளர் ,கூட்டம் இன்னும் முடியவில்லை, எனவே பொதுமக்கள் வெளியேற வேண்டாம் என்று பல தடவைகள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தும் வெளியேறpய பொதுமக்களை நிறுத்த முடியாமல் போயுள்ளது. இதன் காரணமாக சஜித்தின் மே தினக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...