25 68484587d6a77
இலங்கைசெய்திகள்

மாகாண சபைத் தேர்தல் குறித்து வெளியான தகவல்

Share

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் முடிவு எடுக்கப்படும் என்று, அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் பிரபா ருவான் செனரத் இதனை அறிவித்துள்ளார்.

எல்லை நிர்ணய செயல்முறை போன்ற தீர்க்கப்படாத சட்ட மற்றும் தொழில்நுட்பசிக்கல்களே, இதற்கான காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சவால்கள் போதுமான அளவு தீர்க்கப்பட்டு உள்ளூராட்சி சட்ட கட்டமைப்பு உறுதிப்படுத்தப்படும் வரை தேர்தல்கள் நடத்தப்படாது என்று பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா, மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான எல்லை நிர்ணய அறிக்கையை சமர்ப்பித்து பின்னர் அதை நிராகரித்திருந்தார்.

இதன் விளைவாக, அரசாங்கம் இப்போது பழைய தேர்தல் முறைக்குத் திரும்புவதையும் மாகாண சபைகளை எல்லை நிர்ணயம் செய்வதையும் பரிசீலித்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
24 669df6417f6df
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது – மூன்று பேர் சிக்கினர்

திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது – மூன்று பேர் சிக்கினர சுமார்...

images 3 3
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: மூளையாகச் செயல்பட்ட இஷாரா செவ்வந்திக்கு உதவியதாக பெண் சட்டத்தரணி கைது

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலைக்கு மூளையாகச் செயற்பட்டதாகக் கருதப்படும் இஷாரா...

images 1 9
செய்திகள்இலங்கை

கென்யாவில் சிறிய ரக விமானம் விபத்து: 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

கென்யாவின் கடற்கரைப் பகுதியிலிருந்து பயணித்த ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து...

images 3 2
இலங்கைசெய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விரைவில்: 2026 வரவு செலவுத் திட்டம் மக்கள் நலன் சார்ந்ததாக அமையும் என எதிர்பார்ப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, மாகாண சபைத் தேர்தலை இயலுமானவரை...