17 4
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு பாடசாலையொன்றில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பதற்ற நிலை

Share

முல்லைத்தீவு – பாண்டியன்குளம் மகா வித்தியாலயத்தில் உடற்கல்வி ஆசிரியரை இடமாற்றம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களின் பெற்றோர்களால் போராட்டமொன்று இன்றையதினம்(23) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் அங்கு ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்துள்ளனர்.

இந்த பாடசாலையின் கற்றல் கற்பித்தல்களில் காணப்படும் இடர்பாடுகளால் பல மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறி வேறு பாடசாலைக்கு சென்றுள்ளதாக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், முன்னதாக பாடசாலையில் முறையற்ற நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் மாணவர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் அங்கு வந்த பாடசாலை அதிபர் மாணவர்களை தாக்கியதை அடுத்து பெற்றோருக்கும் பாடசாலை சமூக்திற்கும் முறுகல் நிலை ஏற்பட்டதால் அங்கு ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டடதாக தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....