tamilni 17 scaled
இலங்கைசெய்திகள்

கோட்டாபய வீட்டிற்கு முன் போராட்டம் : தெரியாது என கைவிரித்தார் சட்டமா அதிபர்

Share

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின்(Gotabaya Rajapaksa) மிரிஹானில் உள்ள தனியார் இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கலவரங்கள் தொடர்பில் புலனாய்வுத் தகவல் எதுவும் கிடைக்கவில்லை என சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஷமிந்த விக்ரம(Shaminda Wickrama), செயற்பாட்டாளர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணையின் போது, ​​நீதியரசர் யசந்த கோதாகொட(Yasanta Kodagoda) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

போராட்டத்தின் போது அவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிராக நேற்று (18) விசாரணை நடத்தப்பட்டது.

விஜித் மலல்கொட மற்றும் யசந்த கோதாகொட ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட அரசாங்க சட்டத்தரணி ஷமிந்த விக்ரம, நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைக்கும் போது அது தொடர்பான போராட்டம் எவ்வாறு ஆரம்பமானது என்பதை விளக்கியுள்ளார்.

அப்போது, ​​அரசு சட்டத்தரணியிடம் கேள்வியொன்றை முன்வைத்த நீதிபதி யசந்த கோதாகொட, போராட்டம் தொடங்குவதற்கு முன், அது தொடர்பான தகவல்கள் புலனாய்வு அமைப்புகளுக்கு கிடைத்ததா என்று கேட்டார்.

இதற்குப் பதிலளித்த அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி, இவ்வாறான புலனாய்வுத் தகவல்கள் பாதுகாப்புப் படையினருக்குக் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்.

அப்போது அரசு வழக்கறிஞர் இந்த போராட்டம் தொடர்பான காணொளி நாடாக்களை திறந்த நீதிமன்றத்தில் காட்சிப்படுத்தி உண்மைகளை முன்வைத்தார்.

2022 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி மிரிஹானிலுள்ள அப்போதைய அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட இல்லத்தைச் சுற்றியிருந்த போராட்டத்தின் போது காவல்துறையினர் தம்மை அநியாயமாக கைது செய்ததன் மூலம் தமது அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி இந்த அடிப்படை உரிமை மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

 

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 12
சினிமாசெய்திகள்

ஷங்கர் – விக்ரம் சந்திப்பு..! கூட்டணி இணைய வாய்ப்புள்ளதா..?

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியல் நல்ல...

17512685620
இலங்கைசெய்திகள்

அரசியலில் என்ட்ரியா..! ரஹ்மான் இணை அமைச்சரை சந்தித்ததன் பின்னணி என்ன..?

இந்திய சினிமாவின் இசைமேதை, இசையின் உலகநாயகர் ஏ.ஆர். ரஹ்மான், சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் எல்....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 11
சினிமாசெய்திகள்

சினிமாவுக்கு வெளியேயும் தல சாம்பியன் தான்..! அஜித் ரேஸிங் அணிக்கு கிடைத்த வெற்றி மகுடம்..!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாது கார் ரேஸராகவும் மக்களை ஆச்சரியப்படுத்துபவர் தான் நடிகர் அஜித்...

17512832932
சினிமாசெய்திகள்

சினிமா துறையில் போதைப்பொருள் குறித்த பின்னணி!நேர்காணலில் பைல்வான் ரங்கநாதன் கருத்து!

தமிழ் சினிமா துறையில் இடம்பெற்றுள்ள போதைப்பொருள் தொடர்பான அண்மைய சம்பவங்கள், சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன....