9 7
இலங்கைசெய்திகள்

புதிய வரி அறிமுகம்! நிதி அமைச்சு அறிவிப்பு

Share

புதிய வரி அறிமுகம்! நிதி அமைச்சு அறிவிப்பு

அடுத்த ஆண்டில்(2025) வருமான இலக்கினை அடைவதற்கு உதவ கூடிய பிரதான வருமான வழிமுறை யாக சொத்துக்கள் மீதான வரி அறவீடு செய்வதற்கு நிதி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

உருவகப்படுத்தப்பட்ட வாடகை வரி தொடர்பில் நிதி அமைச்சர் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு தெளிவுபடுத்தி உள்ளது.

இந்த வரி ஊடாக வருமானம் ஈட்டுவதற்கே திட்டமிட்ட போதிலும் இந்த வரி சாதாரண வருமானம் ஈட்டுவோரின் மீது சுமத்தப்படாது என தெரிவித்துள்ளது.

கூடுதல் வருமானம் ஈட்டும் நபர்களை இலக்கு வைத்து இந்த வரி அறவீடு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கூடுதல் பெறுமதி உடைய சொத்துக்கள் அல்லது சமூகத்தில் செல்வந்தர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் மீது வரி அறவீடு செய்வதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தகுதியானவர்களுக்கு வரிச் சலுகை வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2 வீதமாகவும் 2026ம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.4 வீதமாகவும் வரி அறவீடு செய்ய உத்தேசித்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. வீடுகள் மீது இவ்வாறு வரி அறவீடு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
death body 1
இலங்கை

மெகசின் சிறைச்சாலையில் உயிரிழந்தவர் தொடர்பில் வெளியான அதிர்ச்சித்தகவல்கள்.

நேற்றைய தினம் இரவு, கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது உயிரிழந்த கைதி...

Chemmani Mass Graves
இலங்கை

தினந்தோறும் கிடைக்கப்பெறும் என்புக்கூடுகள் – அதிகரிக்கும் பதற்றம்.

100 நாட்களாக, செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரையில் 507...

dengue
இலங்கை

தென் மாகாணத்தில் அதிகம் பதிவாகும் டெங்கு நோயாளிகள்.

இந்த ஆண்டில் இதுவரை 88,522 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது....

parlimen president 1
இலங்கை

சிறைச்சாலைகள் மற்றும் கைதிகள் தொடர்பில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், சிறைச்சாலைகளில் நிலவும் நிலைமை...