9 4
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டில் உள்ள சாணக்கியனுக்கு எதிராக தடையுத்தரவு..!

Share

வெளிநாடு சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு (R.Shanakiyan) எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

துருக்கியில் செயற்கை நுண்ணறிவு(AI) சம்பந்தமான செயலமர்வில் கலந்து கொள்ள சாணக்கியன் சென்றுள்ள நிலையில், இலங்கை குற்றவியல் நடவடிக்கைமுறைக் கோவைச் சட்டத்தின் பிரிவு 106(1)(2)(3)யின் கீழ் இந்த தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

மேற்படி விடயம் சம்பந்தமாக மட்டக்களப்பு தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரியினால் மன்றுக்கு தாக்கல் செய்துள்ள அறிக்கையை ஆராய்ந்த மன்று பின்வருமாறு தடையுத்தரவொன்றினை பிறப்பிப்பதற்கு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பில் சாணக்கியன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கையின் சுதந்திர தினம் பெப்ரவரி 4ஆம் திகதி கொண்டாடப்படவேண்டியது என இலங்கை ஜனநாயக குடியரசின் அரசியலமைப்பின் 08ஆவது சரத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த தினத்தில் மட்டக்களப்பு காந்தி பூங்கா பிரதேசத்தில் நடைபெற இருக்கும் சுதந்திரதின நிகழ்வுகளை பாதிக்கும் வகையிலான எந்தவொரு ஆர்பாட்டத்தையோ சட்டவிரோத செயற்பாடுகளையோ மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட எந்தவொரு பகுதியிலும் மேற்கொள்ளக்கூடாதென தடையுத்தரவு எனக்கும் இன்னும் பலருக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...