அநுர உள்ளிட்ட 26 பேருக்கு தடை உத்தரவு!

Anura

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு இன்று (26) ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையிலான நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் 1 மணி முதல் இரவு 8 மணி வரையில் கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீதிகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இதன்படி, ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு மற்றும் காலிமுகத்திடல் வளாகம் உள்ளிட்ட பல பெயரிடப்பட்ட இடங்களுக்குள் பிரவேசிப்பதை தவிர்க்குமாறு மேற்படி பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் மற்றும் போராட்டக்காரர்களுக்கு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version