6 12
இலங்கைசெய்திகள்

பொதுத்தேர்தலுக்காக பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு: முப்படையினர் குவிப்பு

Share

பொதுத்தேர்தலுக்காக பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு: முப்படையினர் குவிப்பு

எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் கடமைகளுக்காக 63,145 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபரும்,பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

நேற்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதற்காக 3200 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் முப்படை வீரர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,12,227 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை சேவையில் ஈடுபடுத்தவும், நாடு முழுவதும் 269 சாலைத் தடைகளை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், 214 கலகத் தடுப்புக் குழுக்கள் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும், எந்தவொரு நாசகார நடவடிக்கைகளையும் கண்காணிப்பதற்காக புலனாய்வு அதிகாரிகளை அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...