4 வயது குழந்தையை தாக்கியவரை தாக்கிய சிறைக்கைதிகள்

24 6663bd5122154

4 வயது குழந்தையை தாக்கியவரை தாக்கிய சிறைக்கைதிகள்

காணொளி சாட்சியம் ஒன்றின் அடிப்படையில், வெலிஓயா ஹன்சவில என்ற கிராமத்தில் 4 வயது குழந்தையை தாக்கினார் என்று குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டவர் மீது அனுராதபுரம் சிறைச்சாலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

முன்னதாக அவர் குழந்தையை தாக்கிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர், நீதிமன்றால் விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டார்.

இந்நிலையில், விளக்கமறியலில் வைத்து அவரை ஏனைய கைதிகள் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்ணாடி கொள்கலனில் வைத்திருந்த சர்க்கரையை சாப்பிட்டதற்காக குறித்த குழந்தை தாக்கப்பட்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Exit mobile version