tamilnid 29 scaled
இலங்கைசெய்திகள்

சிறைச்சாலைகளாக மாறும் அரச கட்டடங்கள்

Share

நாடு தழுவிய ரீதியில் தற்போது கைதுசெய்யப்படும் போதைப்பொருளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை தடுத்து வைக்க அரசாங்க கட்டடங்களை பயன்படுத்தப் போவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் உத்தரவிற்கு அமைய நாடு தழுவிய ரீதியில் யுக்திய என்னும் தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த தேடுதல்களில் கைது செய்யப்படும் சந்தேகநபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது.

இவ்வாறு கைது செய்யப்படும் சந்தேகநபர்களை பயன்படுத்தப்படாத அரசாங்க கட்டடங்களில் தடுத்து வைக்க தீர்மானித்துள்ளாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுக்திய நடவடிக்கையினால் நாடு முழுவதிலும் காணப்படும் 28 சிறைச்சாலைகளிலும் சுமார் 2500 சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் சிறைச்சாலைகளில் 11000 கைதிகளை தடுத்து வைக்க முடியும் என்ற போதிலும், யுக்திய தேடுதல் வேட்டைக்கு முன்னதாகவே 20000 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த தேடுதல் வேட்டையின் பின்னர் மேலும் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துசார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகளில் நிலவி வரும் நெரிசலைக் கருத்திற் கொண்டு புதிய சிறைச்சாலை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும் தற்போதைய பொருளாதார நிலைமைகளினால் கைதிகள் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு ஏற்ற வகையில் பயன்படுத்தப்படாத அரசாங்க கட்டடங்களை கைதிகளை தடுத்து வைக்க பயன்படுத்தப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 13
செய்திகள்அரசியல்இலங்கை

தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிராகப் பொது எதிரணி: ஐக்கிய மக்கள் சக்தியுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இணைவு – நுகேகொடையில் பேரணி!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் (SJB) ஒருங்கிணைக்கப்பட்டுள்ள பொது...

MediaFile 3 3
செய்திகள்உலகம்

லெபனானில் எல்லையைக் கடக்கும் இஸ்ரேலியச் சுவர்: UNIFIL ஆய்வு உறுதி – சுவரை அகற்றக் கோரி ஐ.நா. வலியுறுத்தல்!

லெபனானில் உள்ள நீலக் கோட்டைக் கடந்து இஸ்ரேலிய இராணுவத்தால் கட்டப்பட்ட ஒரு சுவர், டி ஃபேக்டோ...

MediaFile 2 4
இந்தியாசெய்திகள்

டெல்லி தாக்குதல்: கைப்பற்றப்பட்ட 3,000 கிலோ வெடிபொருள் பொலிஸ் நிலையத்தில் வெடிப்பு – தடயவியல் குழு உட்பட 7 பேர் பலி!

தலைநகர் டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10ஆம் திகதி நடத்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதல்...

images 12 1
இலங்கைஅரசியல்செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் 2026 வரவு செலவுத் திட்டம்: 17 நாட்களுக்குக் குழு நிலை விவாதம் இன்று ஆரம்பம்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் (Budget) குழு...