இலங்கை
சிறைச்சாலைகளில் கடும் நெரிசல்
சிறைச்சாலைகளில் கடும் நெரிசல்
நாட்டின் சிறைச்சாலைகளில் கடுமையான நெரிசல் நிலைமை நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடு முழுவதிலும் காணப்படும் சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை 290 வீதத்தினால் அதிகரித்துள்ளது என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துசார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்
நாடு முழுவதிலும் கைதிகளை தடுத்து வைக்ககக் கூடிய மொத்த எண்ணிக்கை 11291 என்ற போதிலும், தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை 26176 என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதியின் அடிப்படையிலான தகவல்களின் பிரகாரம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் 53 வீதமானவர்கள் போதைப்பொருள் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.