நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!
பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைக் குறைப்பு, பொதுமக்களை சென்றடைய வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில், பணவீக்கம் அதிகரித்த போது பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிக்கப்பட்டது.
ஆனால் பணவீக்கம் வீழ்ச்சியடைந்துள்ள சந்தர்ப்பத்தில் விலை குறைப்பு செய்யவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை சற்று குறைவடைந்தாலும், உற்பத்தியாளர்கள் அவற்றில் பாரிய இலாபங்களை பெற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Leave a comment