tamilni 9 scaled
இலங்கைசெய்திகள்

பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு

Share

பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை குறைப்புக்கு வர்த்தக மாஃபியாக்கள் இடையூறாக இருப்பதாக அகில  இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

பேக்கரி பொருட்களின் விலையினை நுகர்வோருக்கு நன்மை ஏற்படும் வகையில் குறைக்க கூடிய நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான உண்மையை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்குமாறு தமது சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கோதுமை மாவின் விலையினை மேலும் 30 ரூபாவினாலும், முட்டை ஒன்றின் விலையை 20 ரூபாவினாலும் குறைக்க முடியும். எனினும் வர்த்தக மாஃபியாக்கள் அதில் இலாபம் ஈட்டும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை கோதுமை மா, தேங்காய் எண்ணெய், முட்டை உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளுக்கு தேவையான பொருட்கள் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

இது தமது தொழிற்துறையை பாரியளவில் பாதித்துள்ளதாலேயே, பேக்கரி உற்பத்திகளின் விலையினை குறைக்க முடியாதுள்ளது.

எனவே இது தொடர்பில் விளக்கமளிப்பதற்கு சந்தர்ப்பம் ஒன்றை ஏற்படுத்தித் தருமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
IMG 7681
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொத்மலையில் மாபெரும் சிரமதானப் பணி: 20 கிராமங்களுக்கான போக்குவரத்துப் பாதையைச் சீரமைக்க 2,000 பேர் திரண்டனர்!

டித்வா (Ditwah) புயலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கொத்மலை, பனங்கம்மன பகுதி மற்றும் மகா பீல்ல கால்வாய்...

MediaFile 2 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அதிவேக வீதியில் அதிரடிச் சோதனை: கடவத்தை நுழைவாயிலில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதி மற்றும் கடவத்தை வெளியேறும் நுழைவாயில் பகுதிகளில் இன்று (18)...

image b16dc0e689
செய்திகள்இலங்கை

மின்சார சபை மறுசீரமைப்பு: 2,200 ஊழியர்கள் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் – வாழ்க்கைத் தரம் கேள்விக்குறி என முறையீடு!

இலங்கை மின்சார சபையின் (CEB) மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, விருப்ப ஓய்வுக்காக (VRS) விண்ணப்பித்துள்ள...

arast 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

1 கோடி ரூபா மோசடி செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் கைது!

இணையத்தளம் வாயிலாகத் தளபாடங்கள் (Furniture) வழங்குவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை...