25 6848e09e665b4
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியே வீட்டுக்கு செல்ல வேண்டும்: சுட்டிக்காட்டும் திலித் ஜயவீர

Share

சட்டவிரோதமான முறையில் கைதி விடுதலை செய்யப்பட்ட விவகாரத்திற்கு ஜனாதிபதியே பொறுப்பு என சர்வஜன பலய கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

எனவே இந்த தவறுக்காக ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

தான் விடுதலை செய்த கைதி பற்றி தனக்கு தெரியவில்லை என ஜனாதிபதி கூறும் போது, காலையில் பத்திரிகைகளின் ஊடாகவே விடயங்களை அறிந்து கொண்டேன் எனக் கூறிய ஜனாதிபதியே நினைவிற்கு வருகின்றார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கைதி விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் நியாயமற்ற வகையில் சிறைச்சாலைகள் ஆணணயாளர் நாயகம் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி பொது மன்னிப்பு பெற்றுக்கொள்ள வேண்டியவர்கள் பற்றிய விபரங்களை அனுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் நேரடியாக ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைப்பார் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் குற்றச் செயலுக்காக வீட்டுக்கு செல்ல வேண்டுமாயின் ஜனாதிபதியே வீட்டுக்கு செல்ல வேண்டுமென திலித் ஜயவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...