1 34
இலங்கைசெய்திகள்

தனித்தீவில் சிறைவைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பாக முக்கிய தரப்புக்கு அழுத்தம்

Share

தனித்தீவில் சிறைவைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பாக முக்கிய தரப்புக்கு அழுத்தம்

பிரித்தானியாவுக்கு சொந்தமான டியாகோ கார்சியா (Diego Garcia) தீவில் வசிக்கும் இலங்கையர்களை பிரித்தானியாவுக்கு அழைத்துவர யவெட் கூப்பர் (Yvette Cooper) மீது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவுக்கு சொந்தமான டியாகோ கார்சியா தீவில் வசிக்கும் இலங்கையர்களில், ஆண்கள் பல்வேறு தாக்குதல்களுக்கு உள்ளாவதாகவும் பெண்கள் உடல்ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு கனடாவுக்கு செல்வதற்காக படகில் புறப்பட்ட இலங்கையர்கள் சிலர், நடுக்கடலில் சிக்கித் தவிக்க, பிரித்தானிய கடற்படை அவர்களை மீட்டு டியாகோ கார்சியா தீவுக்கு அழைத்து சென்றது.

தற்போது, 3 ஆண்டுகள் கடந்தும் அவர்கள் குறித்த தீவியேயே அடைபட்டுள்ளார்கள். அவர்கள் மிக குறைவான பரப்பளவு கொண்ட ஒரு கூடாரத்திலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த தீவில் அனுபவிக்கும் கஷ்டங்களை பொறுத்துக்கொள்ள முடியாமல் அங்கிருந்த 22 பேர் தவறான முடிவெடுத்து தம்மை தாமே மாய்த்துக்கொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நடுக்கடலில் தீவில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களான புகலிடக்கோரிக்கையாளர்களை பிரித்தானியாவுக்கு அழைத்துவர, உள்துறைச் செயலரான யவெட் கூப்பருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே, அந்தத் தீவில் சிக்கித் தவிக்கும் சிலரையாவது பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ளுமாறு வெளியுறவுச் செயலரான டேவிட் லாம்மிக்கு (David Lammy) தீவின் ஆணையரான போல் கேண்ட்லர் (Paul Candler) என்பவர் கடிதம் ஒன்றை எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 690749f63e1f3
இலங்கைசெய்திகள்

காவல்துறை உயர் மட்டத்தில் மாற்றம்: மூத்த டிஐஜி-களின் பதவிகள் இடமாற்றம் – நிர்வாகப் பிரிவில் சஞ்சீவ தர்மரத்ன நியமனம்!

காவல்துறையில் உள்ள மிக மூத்த அதிகாரிகளின் பதவிகள் மற்றும் கடமைகள் மாற்றியமைக்கப்படவுள்ளதாகக் காவல்துறை தலைமையக வட்டாரங்கள்...

image 870x 68edd5575b92d
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை: இஷாரா செவ்வந்தியின் ‘போலி கடவுச்சீட்டு நாடகம்’ – இரட்டிப்புக் கோப்பு உருவாக்கப்பட்டது அம்பலம்!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பின்னணியில் இருந்ததாக கருதப்படும் இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் தயாரிக்கப்பட்ட முத்திரைப் பிழையான...

caption 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் உண்டியல் உடைப்பு: 6 உண்டியல்களில் இருந்து பெருந்தொகை பணம் கொள்ளை!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு...

102018246 f892fa86 2cbc 44fd b1e2 ac87ac946aba
செய்திகள்இலங்கை

உயிர் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு கோரி ஞானசார தேரர் கோரிக்கை: ‘பாதாள உலகக் குழுவினர் சதி’ என குற்றச்சாட்டு!

தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் பொதுபல சேனா...